districts

பாலியல் சீண்டலுக்கு உடன்படாத சிறுமி மீது திருட்டுப் பழி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சிபிஎம்

மயிலாடுதுறை, டிச.5- அடகுக் கடையில் வேலை செய்த  சிறுமி, கடை உரிமையாளரின் பாலியல் சீண்டலுக்கு உடன்படாமல் வேலை யை விட்டு நின்றதால் திருட்டுப் பழி சுமத்தியதைக் கண்டித்தும், கை யூட்டுப் பெற்றுக்கொண்டு, சிறுமியை கைது செய்து சிறையிலடைக்க முயன்ற பெண் காவல் ஆய்வாளரைக் கண்டி த்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர், காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு சிறுமியை மீட்டு வந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகில்  உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக  பெரம்பூர் கடைவீதியில்  உள்ள குமார் என்கிற பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான அடகுக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவரை, கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் ரீதியாக கடை உரிமையாளர் தொந்தரவு செய்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தொடர்ந்து கடைக்கு வருமாறு கடை உரிமையாளர் பால முருகன் வீட்டிற்கு வந்து வற்புறுத்தி யுள்ளார். 

இதனிடையே தனது கடையில் வேலை செய்த போது 5 லட்சத்து 36  ஆயிரம் ரூபாயை சிறுமி திருடி விட்ட தாக பொய்யான புகாரை பெரம்பூர் காவல்நிலையத்தில் பாலமுருகன் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் நாகவள்ளியிடம் பெரும் தொகையை பாலமுருகன் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டி லிருந்த சிறுமியை விசாரிக்க புத னன்று காவல்நிலையம் வருமாறு குடும்பத்துடன் அழைத்த காவல்  ஆய்வாளர் நாகவள்ளி, மதியத்தி லிருந்து மாலை வரை காத்திருக்க வைத்து வழக்குப்பதிவு செய்து சிறை யிலடைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

காவல்நிலையம் முற்றுகை - சிறுமி மீட்பு 

இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குத்தாலம் ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த் தலைமையில், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ். துரைராஜ், மயி லாடுதுறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, தரங்கம்பாடி ஒன்றியக்குழு உறுப்பினர் என். சந்திரமோகன் மற்றும் பெரம்பூர், சேத்தூர், அரசூர், வதிஷ்டாச்சேரி, கொத்தங்குடி பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தையடுத்து, மயிலாடு துறை டிஎஸ்பி(பொ) ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடு்த்து, சிறுமியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீட்டு, வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 

கையூட்டு வாங்கிக்கொண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொய்யான குற்றத்தை சுமத்தி சிறுமியையும், அவரது குடும்பத்தையும் இழிவு படுத்திய அடகுக்கடை உரிமையாளர் பாலமுருகனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு வலி யுறுத்தியுள்ளது.